ரஜினியால் தமிழகத்துக்கு பேராபத்து: நாஞ்சில் சம்பத்

  • IndiaGlitz, [Thursday,May 25 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கிட்டத்தட்ட அனைத்து தலைவர்களுமே கருத்துகூறி விட்ட நிலையில் தற்போது இரண்டாவது சுற்றாக மீண்டும் கருத்து கூறி வருகின்றனர். அதில் குறிப்பாக ஒருசில அரசியல்வாதிகள் ரஜினி அரசியலுக்கு வந்துவிட கூடாது என்பதில் குறியாக உள்ளனர். அவர்களில் ஒருவர் அதிமுக தினகரன் அணியின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்.

ரஜினியின் அரசியல் வருகை குறித்து ஏற்கனவே கருத்து கூறிய நாஞ்சில் சம்பத், 'சிஸ்டம் சரியில்லை என்று கூறியதில் இருந்தே அவருக்கு அரசியலே தெரியவில்லை' என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் இதுகுறித்து கூறுகையில், 'ரஜினி அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டுக்கு பேராபத்து. அவர் அரசியலுக்கே வரக் கூடாது. போர் வரும்போது பார்ப்போம் என கூறுவதெல்லாம் பூச்சாண்டி காட்டுகிற வேலை. ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் அவரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்' என்று கூறினார்.

மேலும் தினகரனுக்காக தமிழகம் முழுவதும் நீதிகேட்கும் பயணம் ஒன்றை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

More News

கலகல கவுண்டமணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கோலிவுட் திரையுலகில் காமெடி சாம்ராஜ்யம் செய்த நடிகர்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி.

மீன்கள்.காம்: ஆன்லைன் மூலம் அரை மணி நேரத்தில் மீன்கள் வாங்கலாம்

குண்டூசி முதல் செல்போன், நகைகள் வகை அனைத்து பொருட்களையும் ஆன்லைனில் வாங்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதேபோல் பீட்சா, பர்கர் உள்பட கிட்டத்தட்ட அனைத்து உணவுப்பொருட்களையும் பெரும்பாலான உணவகங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி செய்து வருகின்றன...

ரசிகர் மன்றம் குறித்து ரஜினியின் பரபரப்பு கடிதம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பேச்சு கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி இருந்த நிலையில் இன்று காலை முதல் அவர் நடிக்கவுள்ள 'காலா கரிகாலன்' திரைப்படம் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது....

'காலா' தலைப்பு ஏன்? இயக்குனர் ரஞ்சித் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள படத்தின் டைட்டில் 'காலா' என்பதை சற்று முன்னர் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்...

குஷ்பு-தமிழிசை நடத்திய பரபரப்பான டுவிட்டர் போர்

பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் டுவிட்டரில் ஆவேசமாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...