close
Choose your channels

தூய்மை பணியாளர்களுக்கு மலர்தூவி மாலை அணிவித்த பொதுமக்கள்: நெகிழ்ச்சி வீடியோ

Wednesday, April 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ ஊழியர்களும், காவல்துறையினரும் இரவு பகலாக தங்கள் உயிரை பணயம் வைத்து பணி செய்து வருகின்றனர். இவர்களுடன் மக்களை காப்பாற்றும் பணியில் இருப்பவர்களில் தூய்மை பணியாளர்களின் பணியும் ஒன்று.

தன்னலமில்லாது பணி செய்து வரும் தூய்மை பணியாளர்களின் பணிக்கு பெரிய அளவில் மரியாதை கிடைப்பதில்லை என்பது அவர்களது மனதில் ஒரு குறையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த குறையை போக்கும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நாபா என்ற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பை சேகரிக்க வந்த தூய்மை பணியாளர்கள் மீது மலர்களை தூவி வரவேற்றனர் ஒரு சிலர் தூய்மைப்பணியாளர்களுக்கு மாலை அணிவித்து அவர்களை கெளரவித்தனர். இதனால் அந்தந்த தூய்மைப் பணியாளர்கள் நெகழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீர் விட்ட சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது.

இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ள பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு கிடைத்துள்ள சரியான மரியாதை என்றும் அவர்களை தான் மிகவும் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos