'நாதஸ்வரம்' சீரியல் நடிகை கர்ப்பம்.. க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சன் டிவியில் ஒளிபரப்பான ’நாதஸ்வரம்’ உள்பட பல சீரியல்களில் நடித்த நடிகை தற்போது கர்ப்பமாக உள்ளதால், கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மலேசியாவை சேர்ந்த ஸ்ரித்திகா, சென்னையில் செட்டில் ஆன போது, தனது சகோதரி சுதா என்பவரின் உதவியால் தொலைக்காட்சியில் அறிமுகமானார். ’கலசம்’, ’கோகுலத்தில் சீதை’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தாலும், அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது ’நாதஸ்வரம்’ சீரியல்தான். இந்த சீரியலில் அவர் மலர்கொடி என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ’மாமியார் தேவை’, ’வைதேகி’, ’குலதெய்வம்’, ’அழகு’, ’மகராசி’, ’சுந்தரி’ உள்ளிட்ட சீரியல்களில் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில், ’மகராசி’என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ’மகராசி’தொடரில் நடித்தபோதே நண்பர்களாக பழகி, அதன் பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் சமீபத்தில், ஸ்ரித்திகா, கர்ப்பமாகி இருப்பதை அடுத்து, கர்ப்பகால புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து, அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments