மீண்டும் நடிப்பில் களமிறங்கும் நதியா: மேக்கப் போடும் வீடியோ வைரல்!

பாசில் இயக்கிய ’பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நதியா அதன்பின்னர் ’மந்திரப்புன்னகை’ ’உயிரே உனக்காக’ ’நிலவே மலரே’ ’அன்புள்ள அப்பா’ ’ராஜாதி ராஜா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நதியா கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் அவருக்கு சனம் மற்றும் ஜனா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். இதனையடுத்து சில காலம் நடிப்புக்கு ஓய்வு விட்ட நதியா அதன் பின்னர் மீண்டும் எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி என்ற திரைப் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அதன்பின்னர் ’தாமிரபரணி’ ’சண்டை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ’த்ரிஷ்யம் 2’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஏற்கனவே திரிஷ்யம் படத்தில் நடித்திருந்த கீதா பிரபாகர் என்ற காவல்துறை அதிகாரி கேரக்டரில் தான் இந்த படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’த்ரிஷ்ய்ம் 2’ படத்திற்காக படப்பிடிப்புக்கு வந்த நதியாவுக்கு மேக்கப் போடும் காட்சிகளின் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் என்பதும், இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழின் சர்ச்சை காட்சி: நீக்கிய டிவி நிர்வாகம்!

விஜய் டிவியில் ரசிகர்களின் மாபெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறு சர்ச்சை ஏற்பட்டுள்ளதை அடுத்து சம்பந்தப்பட்ட காட்சி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

கமல்ஹாசனின் சொத்துமதிப்பு எத்தனை கோடி? வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் வரும் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஹெலிகாப்டரில் இருந்து தில்லா டைவ் அடித்த பிக்பாஸ் நடிகை… வைரல் வீடியோ!

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

தாஜ்மஹால்- ராம்மஹால் என மாற்றப்பட வேண்டும்… பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை கருத்து!

கடந்த 16 ஆம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த முகாலாய மன்னன் ஷாஜகான்.

கல்யாணம் வேணும்… மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த 60 வயது முதியவர்!

ராஜஸ்தானில் 60 வயதான முதியவர் ஒருவர் தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்குமாறு பிள்ளை மற்றும் பேரன், பேத்திகளிடம் கேட்டு