close
Choose your channels

நதியாவுடன் நடித்த சிறுவர்கள் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா? வேற லெவல் கமெண்ட்ஸ்!

Friday, July 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நதியாவுடன் 36 வருடங்களுக்கு முன் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் இப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு வேற லெவல் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 1985ஆம் ஆண்டு பாசில் இயக்கத்தில் மோகன்லால், நதியா, பத்மினி நடிப்பில் உருவான மலையாள திரைப்படம் ’நோக்கெத்த தூரத்து கண்ணும் நட்டு’ இந்த திரைப்படம் பின்னர் தமிழில் ’பூவே பூச்சூடவா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நதியாவுடன் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். அவர்களில் சமீர் மற்றும் சாம் ஆகிய இருவரும் சமீபத்தில் நதியாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 36 வருடங்கள் கழித்து அவர்களை தான் மீண்டும் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும், காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்றும் நதியா அந்த புகைப்படத்தை பதிவு செய்து நதியா தெரிவித்துள்ளார்

இந்த புகைப்படம் ஒரு பக்கம் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பதிவு செய்துள்ள கமெண்ட்ஸ்தான் வேற லெவல் உள்ளது. 36 வருடங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்களுடன் நதியா எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்பொழுது கூட நீங்க அவர்கள் இருவரையும் விட நீங்கள் தான் இளமையாக இருக்கிறீர்கள் என்று பதிவு செய்துள்ளனர். உண்மையில் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது நதியா, அந்த இருவரை விட இளமையான தோற்றத்தில் இருப்பது போல் தோன்றுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.