அம்மா, மாமியாருடன் நதியா: அன்னையர் தின ஸ்பெஷல் புகைப்படம்

நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அனைத்து திரையுலக பிரபலங்களும் தங்கள் அன்னையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் தமிழ் திரையுலகில் கடந்த 90களில் பிரபல நடிகையாக இருந்த நடிகை நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அன்னை மற்றும் மாமியாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் ’அம்மா மற்றும் மாமியார் ஆகிய இருவருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் என்றும் அவர்களுடைய அன்பு என்றும் தனக்கு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 80களின் கனவு நாயகியாக இருந்த நதியா கடந்த 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். அவருக்கு சனம் மற்றும் ஜனா ஆகிய 2 மகள்கள் அடுத்தடுத்து பிறந்தனர். இதனை அடுத்து மீண்டும் ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆன நதியா தற்போது வரை சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும், தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ’த்ரிஷ்யம் 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனாவுக்கு பலியான மேலும் ஒரு பிரபல நடிகர்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்பதும் தினமும் இந்தியாவில் சுமார் 4 லட்சம் பேர்களும் தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் பேர்களும்

நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மருத்துவமனையில் அனுமதி!

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகினர் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா பாதிப்பு காரணமாக முக்கிய பிரபலங்கள் பலியாகி கொண்டிருப்பது

கொங்கு நாட்டுச் சிங்கம் தீரன் சின்னமலை வரலாறு… கேட்டு மகிழுங்கள் ஆடியோ வடிவில்!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது கொங்கு பகுதியில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து மக்களின் விடுதலைக்காக நின்ற ஒரு தலைவர் தீரன் சின்னமலை.

சுக்குநூறாக உடையும் மநீம?… நடிகர் கமல்தான் காரணமா? காரசாரமான வீடியோ விளக்கம்!

மாற்றம் என்பதை வலியுறுத்தி கடந்த 2018 பிப்ரவரி மாதத்தில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவங்கினார்.

டுவிட்டர் முடக்கத்தை அடுத்து இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம்: கங்கனாவுக்கு தொடரும் சோதனை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்சிஜன் குறித்து சர்ச்சைக்குரிய டுவிட் ஒன்றை பதிவு செய்த நடிகை கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டது என்பதும் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது