close
Choose your channels

அம்மா, மாமியாருடன் நதியா: அன்னையர் தின ஸ்பெஷல் புகைப்படம்

Monday, May 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அனைத்து திரையுலக பிரபலங்களும் தங்கள் அன்னையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் தமிழ் திரையுலகில் கடந்த 90களில் பிரபல நடிகையாக இருந்த நடிகை நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அன்னை மற்றும் மாமியாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் ’அம்மா மற்றும் மாமியார் ஆகிய இருவருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் என்றும் அவர்களுடைய அன்பு என்றும் தனக்கு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 80களின் கனவு நாயகியாக இருந்த நதியா கடந்த 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். அவருக்கு சனம் மற்றும் ஜனா ஆகிய 2 மகள்கள் அடுத்தடுத்து பிறந்தனர். இதனை அடுத்து மீண்டும் ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆன நதியா தற்போது வரை சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும், தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ’த்ரிஷ்யம் 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.