close
Choose your channels

நாங்க செலவு செஞ்ச பணம் கூட சம்பளமா கிடைக்கல: நாடியா சாங் குடும்பத்தினர் அதிருப்தி

Thursday, October 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நாங்கள் செலவு செய்த பணம் கூட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக கொடுக்கப்படும் சம்பளம் இல்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது என பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் நபராக வெளியேற்றப்பட்ட நாடியாசாங் உறவினர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நாடியாசாங் முதல் வார நாமினேஷனிலேயே குறைவான வாக்குகள் பெற்றதை அடுத்து வெளியேற்றப்பட்டார். மலேசியாவில் இருந்து கடந்த சீசனில் கலந்துகொண்ட முகேன் டைட்டில் பட்டத்தை வென்றதை அடுத்து நாடியாசாங்கிற்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்த்து அவரது குடும்பத்தினர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் முதல் வாரமே அவரை வெளியேற்றி விட்டது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடியாசாங் அவர்களுக்கு குறைவான வாக்குகள் பெற்றதால்தான் வெளியேற்றப்பட்ட கூறியிருந்த நிலையில் மலேசியாவில் நாடியாசாங்கிற்கு அதிகமான ரசிகர்கள் உண்டு என்றும் ஆனால் மலேசியாவில் இருந்து நாடியாசாங் அவர்களுக்கு வாக்களிக்க முடியவில்லை என்றும் இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்து இருந்தால் கண்டிப்பாக நாடியாசாங் அதிகமாக வாக்குகள் பெற்று இருப்பார் என்றும் அவருடைய உறவினர்கள் கூறியுள்ளனர்.

மேலும் நாடியாசாங் மலேசியாவில் இருந்து சென்னை வருவதற்கு போக்குவரத்து செலவு மற்றும் தங்கும் செலவு ஆகியவை கூட அவர்கள் இரண்டு வாரத்திற்கு கொடுக்கும் சம்பளம் போதாது என்றும் இதனால் அதுமட்டுமின்றி கூடுதலாக ஒரு வாரங்கள் நாடியாசாங் இருந்திருந்தால் அவருக்கு பிரபலம் கிடைத்திருக்கும் என்றும் அவருடைய குடும்பத்தினர் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.