நடிகர் சங்க தேர்தல் குறித்த பரபரப்பு தீர்ப்பு: 

நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

அதன்படி சற்று முன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அந்த தீர்ப்பின் படி ந’டிகர் சங்க தேர்தல் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரித்து அடுத்த மூன்று மாதங்களில் நடிகர் சங்க தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்

மேலும் இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் என்பவரின் தலைமையில் நடக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி புதிய தேர்தல் நடத்தும் வரை தற்போது உள்ள சிறப்பு தனிஅதிகாரியே நடிகர் சங்க பணிகளை கவனித்து கொள்வார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

விஷாலின் பாண்டவர் அணி மற்றும் கே பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிட்ட நிலையில் தற்போது அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

சினேகா வீட்டிற்கு வந்த புதுவரவு: குடும்பத்தினர் மகிழ்ச்சி

சமீபத்தில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகை சினேகாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவருடைய கணவரும்

கொரோனா வைராஸால் பாதிக்கப் பட்டாரா? கேரள நர்ஸ் – சவுதி சுகாதார அதிகாரி தகவல்

முன்னதாக, தென்மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு செவிலி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை

பிரபல தமிழ் இயக்குனர் விபத்தில் சிக்கி காயம்: மருத்துவமனையில் அனுமதி!

பிரபல தமிழ் இயக்குனர் ஒருவருக்கு இன்று காலை விபத்து ஏற்பட்டு கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

0%  மாசில்லாத பருவ நிலை - உலகப் பொருளாதார மாநாட்டில் கிரேட்டா துன்பர்க் 

கடந்த வருடம் பருவ நிலை மாற்றத்தைக் குறித்து உலகத் தலைவர்களைக் குற்றம் சாட்டியிருந்தார் 16 வயது சிறுமி கிரெட்டா துன்பெர்க்

பிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டிய நடிகர் மீது வழக்கு!

பிரபல ரவுடிகள் தங்களுடைய பிறந்தநாளை வாளால் கேக் வெட்டி கொண்டாடுவார்கள் என்று பல செய்திகள் வெளியாகியதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.