புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா. நடிகர் சங்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கை

  • IndiaGlitz, [Wednesday,March 29 2017]

சமீபத்தில் கூடிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் நடிகர் சங்கத்திற்கு என புதிய்தாக கட்டப்பட்டும் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா மார்ச் 31ஆம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி தற்போது அடிக்கல் நாட்டுவிழாவிற்கான அழைப்பிதழை முறைப்படி வெளியிட்டுள்ள நடிகர் சங்கம் இதனுடன் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா சென்னை,தியாகராய நகர், அபிபுல்ல சாலையிலுள்ள நடிகர் சங்க வளாகத்தில் வருகிற மார்ச் 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது

இவ்விழாவில் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் விருந்தினராக வருகை தந்து வாழ்த்தி ஆசீர்வதிக்குமாறு நடிகர் சங்க தலைவர் நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார் மேலும் இவ்விழாவில் பிரபல திரை நட்சத்திரங்கள்,மூத்த நடிகர் நடிகைகள், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களாக உள்ள அனைத்து மாவட்ட நாடக நடிகர் நடிகைகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

More News

IIFA விருது பெற்ற தமிழ் நட்சத்திரங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட ஆகிய நான்கு தென்னிந்திய மொழி படங்களுக்கு வழங்கப்படும் IIFA என்று கூறப்படும் இண்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகாடமி விருதுகள் வழங்கும் விழா நேற்றும் இன்றும் ஐதராபாத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது...

கமல் ஒரு அகங்காரம் பிடித்த முட்டாள், ரஜினி ஒரு கோழை: சுப்பிரமணியன் சுவாமி

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில மாதங்களாக தமிழகத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்

மீண்டும் எழுச்சி பெறும் தமிழ் இளைஞர்கள்.

தமிழக மக்களின் கோரிக்கைகளுக்காக இனிமேல் அரசியல்வாதிகளை நம்பி பயனில்லை, மக்களே களத்தில் இறங்கினால்தான் காரியம் நடக்கும் என்பதை நிரூபித்த நிகழ்ச்சி சென்னை மெரீனா ஜல்லிக்கட்டு போராட்டம். உலகப்புகழ் பெற்ற தமிழ் இளைஞர்களின் இந்த எழுச்சி போராட்டத்தால் ஜல்லிக்கட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது

சென்னை மெரீனாவில் கடலில் இறங்கிய மாணவர்கள். பதட்டத்தில் போலீசார்

விவசாயிகள் மற்றும் நெடுவாசல் பிரச்சனைகளை உடனே தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முதல் சென்னை மெரீனாவில் மாணவர்கள் போராட தொடங்கியுள்ளனர்.

பாஜக தேசிய இளைஞர் அணி செயற்குழுவில் பிரபல நடிகை

பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுமான் மகளும், டான்ஸ் மாஸ்டரும், நடிகையுமான காயத்ரி ரகுராம், கடந்த சில வருடங்களாக பாஜகவில் இணைந்து அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்.