நெடுவாசல் போராட்டம் குறித்து நடிகர் சங்கத்தின் முக்கிய முடிவு

  • IndiaGlitz, [Wednesday,March 01 2017]

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் போராடிய போராட்டத்திற்கு இணையாக தற்போது நெடுவாசல் போராட்டம் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், திரையுலகினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளது. இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: "தற்போது தமிழகம் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் இன்றி இயற்கையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறது. எதிர்வருகிற காலங்களும் மழை வந்து நம்பிக்கையூட்டுவதாக இல்லை என்ற நிலை பயப்படுத்துகிறது.
இந்நிலையில் மீத்தேன்' என்கிற திட்டம் ஹைட்ரோ கார்பன்' திட்டமாக மறுவடிவமெடுத்து புதுக்கோட்டை, தஞ்சை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் செயல்படுத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நாட்டிற்கும், வளர்ச்சிக்கும் உகந்த திட்டமாக இருந்தாலும், விவசாய நிலங்களை அழித்தும் அதற்கான பாதிப்பை உண்டாக்கியும் ஏற்படுத்தும் திட்டம் எதுவுமே ஏற்புடையதல்ல. அத்தோடு, இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும்போது, அப்பகுதி மக்களிடையே விளக்கி ஒப்புதல் பெற்ற பிறகே செயல்படுத்தவேண்டும்.
களமிறங்கி போராடும் மக்களின் உணர்வுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் நாங்கள் அவர்களுக்கு என்றும் துணை நிற்போம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். மக்களும், தமிழக அரசும் வைத்துள்ள இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இத்திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது"
இவ்வாறு நடிகர் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

ஸ்டிக்கர் ஒட்டிய அன்புமணி ராமதாஸ் கைது

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தமிழக அரசு இன்னும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ஒருசில டாஸ்மாக் கடைகளை அகற்றவில்லை.

புதிய சங்கம். பிரபல தமிழ் நடிகை அதிரடி அறிவிப்பு

சமீபத்தில் நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் தென்னிந்திய திரையுலகையே உலுக்கிய நிலையில் இன்னும் ஒருசில நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படுத்தினர்....

குஷ்பு வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

முன்னாள் நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அதிகாரிகள் மறுத்ததை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் இன்று  அதிரடி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது...

இன்று முதல் வெளிநாட்டு பானங்களுக்கு மூடுவிழா. இளைஞர்களின் 2வது வெற்றி

கடந்த மாதம் சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலகின் கவனத்தை திருப்பியது மட்டுமின்றி தமிழக மக்களிடையே பல்வேறு விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தியது.

வழக்கிலிருந்து தப்பித்தார் சசிகலா

அதிமுக எம்பி சசிகலா புஷ்பா மீது நிர்வாண மசாஜ் புகார் கொடுத்த அவரது வீட்டு பணிப்பெண்கள் தங்களது புகாரை திடீரென வாபஸ் பெற்றுள்ளனர். ஒருசிலரின் நெருக்கடியினால்தான் தாங்கள் புகார் கொடுத்ததாக அந்த பணிப்பெண்கள் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...