நடிகர் சங்கத்தின் தீபாவளி பரிசு. உறுப்பினர்கள் மகிழ்ச்சி

  • IndiaGlitz, [Monday,November 02 2015]

சமீபத்தில் நடிகர் சங்கத்தில் புதியதாக பதவியேற்ற நாசர், விஷால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ஆக்கபூர்வமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பரிசாக ரஜினி, கமல் உள்பட அனைத்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் சங்க செலவில் தீபாவளி பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு வேட்டி, பெண்களுக்கு சேலை மற்றும் அத்துடன் ஒரு பை இனிப்பு அடங்கிய பரிசுப்பொருட்கள் அனைத்து உறுப்பினர்களின் வீட்டிற்கே சென்று கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நாடக நடிகர்கள் உள்பட 3500 பேர்களும் பயனடைவர். இதனால் நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நடிகர் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் பத்து பேர் தனி குழுக்களாக மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அங்குள்ள நாடக நடிகர், நடிகைகளை நேரில் சந்தித்து அவர்களது வாழ்வாதாரம் பற்றியும் ,வருமானம் மற்றும் அவர்களது தற்போதைய நிலை , செய்யும் தொழில் போன்றவைகளை நேர்த்தியாக கணக்கெடுத்து தலைமைக்கு தெரிவிக்கும் வகையில் ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பணி வரும் தீபாவளி பண்டிகைக்கு பின் துவங்கவுள்ளதாகவும் கணக்கெடுப்பிற்கு பின்னர் உதவி தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக நடிகர் சங்கத்தின் சார்பில் வேண்டிய உதவிகள் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

ராசியான நடிகையுடன் கைகோர்க்கும் விஷால்

நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று சமீபத்தில் பதவியேற்ற நடிகர் விஷால்....

நடிகர் சங்கத்தின் ரூ.1.5 கோடி மதிப்பிலான வீட்டின் நிலை என்ன? புதிய நிர்வாகிகள் ஆய்வு

கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்காக நடிகர் சங்கம் சார்பில் திரட்டப்பட்ட நிதிகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேள்வி எழுந்த நிலையில், தற்போது நடிகர் சங்கத்திற்காக ரூ.1.5 கோடியில் வாங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் நிலை குறித்து நடிகர் சங்கத்தில் புதியதாக பொறுப்பேற்ற நிர்

'மருது' படத்தில் இணைந்த இரு துருவங்கள்

நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்காக விஷால் மற்றும் ராதாரவி ஆகியோர் இரு துருவங்களாக செயல்பட்டதையும், தேர்தலின்போது ஒருவரையொருவர் தாக்கி பேசியதையும் பார்த்த போது இனிமேல் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்பட்டது......

சூர்யா-ஹரியின் 'சிங்கம் 3' இசையமைப்பாளர்

தனுஷ் நடித்த ''3'' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, அறிமுகமான முதல் படத்தில் இடம்பெற்ற ''கொலைவெறி'' பாடலால் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் அனிருத், அதன் பின்னர் கோலிவுட்டில் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.....

ஜீவாவின் 25வது படம்

ஒவ்வொரு நடிகருக்கும் 25வது படம் என்பது ஒரு முக்கியமான கட்டம். அவர்களுடைய அடுத்த கட்ட பயணத்திற்கு இந்த 25வது படம் வெற்றி பெறுவது என்பது அவர்களுக்கு தரும் ஊக்கமாகவே கருதப்படுகிறது....