close
Choose your channels

மீண்டும் மண்ணுக்குள் சென்ற சுஜித்: கண்ணீருடன் புதைக்கப்பட்ட உடல்!

Tuesday, October 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் உயிரைக் காப்பாற்ற எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததை அடுத்து இன்று அதிகாலை சுஜித்தின் உடல் மட்டுமே மீட்கப்பட்டது.

சுஜித்தின் உடலை பார்த்து கதறி அழுத அவனது பெற்றோர்கள் மட்டும் சகோதரரை ஆறுதல்படுத்த உறவினர்கள் வார்த்தைகள் இன்றி திணறினர்.

மண்ணுக்குள் கடந்த 80 மணி நேரமாக இருந்து தன்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா? என்று தவித்த சிறுவன் சுஜித் தற்போது உயிரற்ற உடலாக மீண்டும் மண்ணுக்குள்ளேயே புதைக்கப்பட்டான். சிறுவன் சுஜித் உடல் சற்றுமுன்னர் கிறிஸ்துவ முறைப்படி நடுக்காட்டுப்பட்டி அருகே இருந்த பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இறுதிச்சடங்கின்போது சுஜித்தின் பெற்றோர்கள், உற்றார், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சிறுவன் சுஜித்தின் ஆத்மா உண்மையிலேயே சாந்தி அடையவேண்டும் என்றால் இனி ஒரு உயிர் ஆழ்துளை கிணற்றால் போகக்கூடாது என்பதை நாம் ஒவ்வொருவரும் உறுதிமொழியாக ஏற்க வேண்டும் என்பதை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.