close
Choose your channels

இரண்டாவது திருமணத்திற்கு நாகசைதன்யா போட்ட ஒரே ஒரு கண்டிஷன்!

Monday, April 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும் ஆனால் தனது பெற்றோரிடம் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன .

கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் ஜோடிகளாக இருந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா திருமணம் நடந்தது என்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்த செய்தி அவ்வப்போது ஊடகங்களில் கசிந்து வரும் நிலையில் தற்போது பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க இரண்டாவது திருமணத்திற்கு நாக சைதன்யா ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் தான் திருமணம் செய்யப் போகும் பெண் நடிகையாக இருக்க கூடாது என்று பெற்றோருக்கு அவர் நிபந்தனை விதித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்த முறையான அறிவிப்பை அவரது பெற்றோர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.