நடிகை சமந்தா திருமண தேதி! அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,June 08 2017]

பிரபல நடிகை சமந்தாவும் பிரபல தெலுங்கு நடிகரும் நடிகர் நாகார்ஜூனா-அமலா தம்பதியின் மகனுமான நாக சைதன்யாவுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில் இவ்வருட இறுதியில் இவர்களுடைய திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதன்படி சற்று முன்னர் சமந்தா-நாகசைதன்யா திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய திருமணம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தா தற்போது இளையதளபதி விஜய்யுடன் 'தளபதி 61', விஷாலுடன் 'இரும்புத்திரை', அநீதிக்கதைகள் மற்றும் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பை தொடர்வதாக அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சீயான் விக்ரமின் 'சாமி 2' படத்தில் வில்லனாகும் பிரபல ஹீரோ

சீயான் விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவநட்சத்திரம்' மற்றும் விஜய்சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

ஒன்றா இரண்டா? '2.0' படத்தில் எத்தனை பாடல்கள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

'வேலைக்காரன்' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் 'வேலைக்காரன்' படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

அணியின் முடிவை அஸ்வின் புரிந்து கொள்வார். விராத் கோஹ்லி

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்டான் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் உலகின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கலந்து கொள்ளாதது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது...

சசிகலாவுடன் பிரபல நடிகை ரகசிய சந்திப்பு: திடுக்கிடும் திருப்பம் ஏற்படுமா?

எம்.ஜி.ஆர் ஆரம்பித்து, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக தற்போது மூன்று அணிகளாக பிளவுபட்டு இருக்கின்றது. குறைந்தபட்சம் இன்னும் நான்கு வருடங்களுக்காவது அதிமுக ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கருதி வருகின்றனர்...