close
Choose your channels

சமந்தாவுடன் விவாகரத்து: முதல்முறையாக விளக்கமளித்த நாகசைதன்யா!

Thursday, September 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை சமந்தா அவரது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய உள்ளார் என வதந்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது என்பது தெரிந்ததே. இது குறித்து இருவரும் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில் சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியை வைத்து இணைய தளங்களில் செய்திகள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து முதல்முறையாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நாகசைதன்யா கூறியுள்ளார். திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை நான் சிறு வயதிலிருந்தே கடைபிடித்து வருகிறேன். இந்த பழக்கம் என்னுடைய அம்மா அப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்ததும், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அந்த நல்ல பழக்கத்தை நானும் கடைபிடித்து வருகிறேன்.

இந்த நிலையில் சமந்தாவுடன் விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இன்று ஒரு செய்தி பரபரப்பாக இருந்தால், நாளை இன்னொரு செய்தி பரபரப்பாக இருக்கிறது, முந்தையநாள் செய்திகள் மறந்து விடுகின்றன. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன் நானும் இதுகுறித்து கவலைப்படுவதே நிறுத்தி விட்டேன்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.