close
Choose your channels

சமந்தாவை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா? மனம் திறந்த நாகசைதன்யா!

Saturday, December 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரை உலகின் நட்சத்திர ஜோடியான நாகசைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் விவாகரத்து பெற்று பிரியபோவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தனர் என்பதும் இந்த அறிவிப்பு இரு தரப்பு ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாக சைதன்யாவை பிரிவதற்கான காரணம் என்ன என்பதை ஏற்கனவே மறைமுகமாக சமந்தா தனது சமூக வலைத்தள பதிவுகள் மூலம் கூறியுள்ள நிலையில் முதல் முறையாக நாக சைதன்யாவும் பேட்டி ஒன்றில் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

’ஒரு திரைப்படத்தில் நான் ஒப்பந்தமாகும் முன் நான் அந்த திரைப்படத்தின் என்னுடைய கேரக்டர், கதை ஆகியவை என்னுடைய குடும்ப கெளரவத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை யோசித்து தான் நான் ஒப்புக் கொள்வேன் என்றும் எனக்கு முழு திருப்தியிருந்தால் மட்டுமே அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வேன் என்று தெரிவித்திருந்தார்.

இதிலிருந்து சமந்தா தனது படங்களை ஒப்புக் கொள்ளும்போது குடும்பத்தின் கௌரவம் குறித்து அவர் கவனிக்கவில்லை என்பதை அவர் மறைமுகமாக கூறுவதாக தெரிய வருகிறது. குறிப்பாக ’சூப்பர் டீலக்ஸ்’, ‘தி ஃபேமிலிமேன் 2’ போன்ற படங்களில் அவர் நடித்த கேரக்டர்கள் நாகசைதன்யாவின் குடும்ப இமேஜை பாதிக்கும் அளவுக்கு இருந்தது என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டி உள்ளதாக தெரிகிறது. நாக சைதன்யாவின் இந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.