சமந்தாவை பிரிந்தபின் ரூ.15 கோடி செலவு செய்த நாக சைதன்யா.. எதற்காக தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,March 28 2023]

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக நாக சைதன்யா விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது நாக சைதன்யா ரூ.15 கோடி மதிப்புள்ள அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத்தில் உள்ள முக்கிய இடங்களில் ஒன்று ஜூப்லி ஹில்ஸ். இந்த பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றை நாக சைதன்யா வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சமந்தாவின் பிரிவிற்கு பின்னர் தற்போது அவர் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த நடிகை சோபிதா துளிபலாவுடன் டேட்டிங் சென்று கொண்டிருப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்னர் நாக சைதன்யா இந்த புதிய வீட்டில் தான் வசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சமந்தாவுடன் அவர் வாழ்ந்து கொண்டிருந்த போது ரூ.100 கோடி மதிப்புள்ள வீட்டை இருவரும் சேர்ந்து வாங்கியதாகவும் சமந்தாவை பிரிந்தபின், அந்த வீட்டை சமந்தாவுக்கே அவர் கொடுத்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா தற்போது புதிய வீட்டை வாங்கி இருக்கும் தகவல் இணையதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில் நடிகை சோபிதா துளிபலாவுடன் நாக சைதன்யா இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் நாக சைதன்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கஸ்டடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வியூகம் போட்டதே நான் தாண்டா.. 'அதர்வா' படத்தின் டீசர்..!

நடிகர் கார்த்திக் ராஜூ நடிப்பில் உருவான 'அதர்வா' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 'ஜவான்' படத்தில் நயன்தாரா பிகினியில் காட்சியா? 'பதான்' தீபிகாவுக்கு போட்டியா?

சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் 'பதான்' திரைப்படம் ரூபாய் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஒரு பாடல் காட்சியில் பிகினி அணிந்தது பரபரப்பை

திடீரென தலைமறைவான பிக்பாஸ் அபினவ் மனைவி.. வலை வீசி தேடும் போலீஸார். என்ன காரணம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிநவ் என்பவரின் மனைவி அபர்ணா திடீரென தலைமறைவாகியுள்ளதை அடுத்து அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

'புன்னகை அரசி' நடிகையின் கணவர் சொந்தமாக விமானம், கப்பல் வைத்திருந்தரா?

தமிழ் திரை உலகின் புன்னகை அரசி என்று கூறப்படும் கேஆர் விஜயாவின் கணவர் சொந்தமாக விமானம் மற்றும் கப்பல் வைத்திருந்த தொழிலதிபர் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

முதல் பரிசு பெற்ற இவர் ஒரு ஆண் என்பதை நம்ப முடிகிறதா? ஒரு ஆச்சரிய தகவல்..

மேடை உள்ள படத்தைப் பார்த்தால் ஒரு அழகிய பெண் என்றுதான் அனைவரும் எண்ணுவார்கள். ஆனால் இவர் ஒரு ஆண் என்பதை நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.