close
Choose your channels

இரண்டாவது திருமணம் குறித்து விளக்கம் அளித்த நாகசதன்யா!

Friday, April 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியை பிரிந்த நிலையில் அவர் இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இந்த நிலையில் இதுகுறித்து நாக சைதன்யா தற்போது விளக்கமளித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யா - சமந்தா திருமணம் நடந்த நிலையில் நான்கே ஆண்டுகளில் இருவரும் பிரிய முடிவு செய்தனர். இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தில் இதனை அறிவித்ததை அடுத்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி விட்டதாகவும் அவருக்கு பெண் பார்க்கும் படலத்தை அவரது பெற்றோர்கள் தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நாக சைதன்யா, மணப்பெண் நடிகையாக இருக்க கூடாது என்று நிபந்தனை விதித்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நாக சைதன்யா, நானும் சமந்தாவும் இன்னும் சட்டபூர்வமாக பிரியவில்லை என்றும் அதற்குள் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி விட்டதாக வதந்தி கிளம்பியுள்ளது வருத்தத்தை அளிப்பதாகவும் தயவு செய்து இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாகசைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்த செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்பது உறுதியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.