close
Choose your channels

விவாகரத்துக்கு  யார் காரணம்? சமந்தா-நாகசைதன்யா பிரிவு குறித்து நாகார்ஜூனா!

Wednesday, January 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பிரபல நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை பிரிய போவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவருமே எதனால் தாங்கள் பிரிகிறோம் என்பதை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்த நாகசைதன்யா என்னுடைய குடும்பத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் எந்த ஒரு கேரக்டரிலும் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்து சமந்தாவை மறைமுகமாக குறிப்பிடுவதாக கூறப்பட்டது. நாகார்ஜுனா குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் சமந்தா நடித்ததால் தான் இந்த பிரிவு ஏற்பட்டதாகவும் புரிந்து கொள்ளப்பட்டது

இந்த நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவு குறித்து முதல் முதலாக கருத்து தெரிவித்துள்ள நாகார்ஜுனா, ‘சமந்தா தான் முதன் முதலில் விவாகரத்து வேண்டும் என்று கேட்டதாக கூறியுள்ளார். சமந்தா, நாக சைதன்யா ஆகிய இருவருமே நெருக்கமாக தான் இருந்தார்கள் என்றும் அவர்களுக்குள் எப்படி பிரச்சனை வந்தது என்று எனக்கு தெரியவில்லை என்றும் கூறினார். மேலும் கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தை கூட இருவரும் ஒன்றாக கொண்டாடினார்கள் என்றும் அதன்பிறகே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் சமந்தா-நாகசைதன்யா பிரிவிற்கு என்ன காரணம் என்பதை அவரும் சொல்லவில்லை என ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.