close
Choose your channels

காசியால் பாதிக்கப்பட்ட பெண்களை தனி ரூட் போட்டு மயக்கிய நண்பர்: அதிர்ச்சி தகவல்

Wednesday, June 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பள்ளி மாணவிகள் முதல் நடுத்தர வயது குடும்ப பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோவில் காசி தற்போது கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். சமீபத்தில் காசியை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் காசிக்கு தெரியாமல் காசி கழட்டி விட்ட பெண்களை தனியாக ரூட் போட்டு அவரது நண்பர் தினேஷ் என்பவர் மயக்கிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது

நாகர்கோவில் காசி வழக்கமாக பெண்களை மயக்கி பாலியல் உறவுசெய்துவிட்டு அதன் பின் சில வாரங்களில் அந்த பெண்களை கழட்டி விடுவார். இவ்வாறு கழட்டிவிடுவதற்காக தன்னுடைய நண்பர் தினேஷ் என்பவரை அவர் வைத்திருந்தார். காசி கழட்டிவிடும் பெண்களை சமாதானப்படுத்தும் தினேஷ், அவர்களை காசியிடம் இருந்து பிரித்துவிடுவதையே வேலையாக செய்தார்.

இந்த நிலையில் தான் தினேஷ் தனி ரூட் போட ஆரம்பித்துள்ளார். காசியால் கழட்டிவிடப்படும் பெண்களிடம் சென்று காசியைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக கூறி அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது போல் பேசி படுக்கையில் வீழ்த்துவதும், காசியில் போலவே பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது

இதுகுறித்த தகவல் காசியிடம் விசாரணை செய்தபோது தெரிந்து கொண்ட போலீசார் தற்போது தினேஷையும் கைது செய்துள்ளனர். தினேஷின் தந்தை நாகர்கோவிலில் பெரிய பணக்காரர் என்றும், பல இனிப்பு கடைகளுக்கு சொந்தக்காரர் என்றும் கூறப்படுகிறது 

காசிக்கே தெரியாமல் காசியில் நண்பர் தினேஷ் தனி ரூட்டில் பெண்களை மடக்கி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட விவகாரம் தற்போது தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.