காதல் கணவரை மணந்தார் 'நாகினி' நடிகை:  குவியும் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Thursday,January 27 2022]

சன் டிவியில் ஒளிபரப்பான ’நாகினி’ என்ற சீரியலில் நடித்த நடிகை மௌனி ராய் தனது காதலரை திருமணம் செய்துகொண்ட நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தொலைக்காட்சி சீரியல் நடிகை மற்றும் பாலிவுட் நடிகையான மௌனி ராய் கடந்த சில ஆண்டுகளாக சுராஜ் நம்பியார் என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் மெளனிராய் - சுராஜ் நம்பியார் திருமணம் கோவாவில் கோவாவில் நடந்த நிலையில் பல திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த திருமணத்தில் மௌனி ராய் நெருங்கிய தோழியான நடிகை மந்திரா பேடியும் கலந்து கொண்டார் என்பதும், அவர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மெளனி ராயும் தனது சமூக வலைத்தளத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ’Everything' என்ற கேப்ஷனை பதிவு செய்துள்ளார். கேரளா மற்றும் பெங்காலி முறைப்படி இவர்களது திருமணம் நடந்துள்ளதை அடுத்து இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை மீது திடீர் வழக்குப்பதிவு… என்ன காரணம்?

கூகுள் நிறுவனத்தின் மீதும் அந்நிறுவனத்தின் செயல்தலைவர் சுந்தர்பிச்சை

இந்தியாவில் கொகைன் கொடுத்து மிரட்டினார்கள்… பிரபல வீரர் கூறிய திடுக்கிடும் தகவல்!

ஜிம்பாபே அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி வீரருமான பிரண்டன் டெய்லர் தன்னை இந்தியாவில் உள்ள தொழிலதிபர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விஜய் காட்டிய பச்சைகொடியால் ரசிகர்கள் குஷி!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை மீது பிரபல இயக்குனர் புகார்!

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது பிரபல இயக்குனர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகத்திலேயே பிரசவ வலி தான் மிகப்பெரியது: நடிகை சமந்தா

 உலகத்திலேயே பிரசவ வலிதான் மிகப்பெரியது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.