நமிதாவின் 'பாதி உண்மை'யில் முழு உண்மை இருக்கின்றதா?

  • IndiaGlitz, [Thursday,July 27 2017]

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட நமீதா தற்போதுதான் தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து அவர் ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதியுள்ளார்.

'பாதி உண்மை' என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்த கவிதையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் ஒரு புன்னகையுடன் காலையில் விழித்துவிட்டு நல்லதை செய்ய விரும்புவீிர்கள் ஆனால் யாராவது உங்களை தூண்டிவிடுவதால், உங்கள் மன அமைதி குலைந்துவிடுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள் நிச்சயம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவரை குறிப்பிடுவதாக உள்ளது. அவர் குறிப்பிட்டு ஒருவரது பெயரை இந்த வரிகளில் குறிப்பிடவில்லை என்றாலும் அது ஓவியாவை குறிப்பிடுவதாகவே தெரிகிறது.

நமீதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும்போது கமல்ஹாசனிடம் ஓவியா குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சி குறித்து அவர் குறிப்பிடும்போது ஒரு முழு நாளில் நடந்த நிகழ்ச்சிகளில் ஒருமணி நேரமாக சுருக்கும்போது பல உண்மைகள் மறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நமீதாவின் இந்த 'பாதி உண்மை' கவிதையில் எந்த அளவுக்கு முழு உண்மை உள்ளது என்பது போக போகத்தெரியும்.

More News

நேற்று ராஜினாமா: இன்று மீண்டும் முதல்வராக பதவியேற்பு

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பதை பார்த்தோம்...

ஆரவ்வை தொவைச்சு காயப் போட்ருவேன்: ஜூலியின் ஆத்திரம் ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வில்லியாக கிட்டத்தட்ட செயல்பட்டு வரும் ஜூலி, யாரையாவது குற்றம் சொல்லி கொண்டிருப்பதையே பிழைப்பாக கொண்டு வருகிறார்...

ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும்: ஓவியா

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாகவே ஓவியாவுக்கு மவுசு அதிகரித்து கொண்டே வருகிறது...

ஊழல் அரசியல்வாதிகளுக்கு கமல்ஹாசனின் தைரியமான விளக்கம்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை பரபரப்புடன் கூறி வருகிறார்...

'நானா தானா வீணா போனா' சூர்யாவின் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சூர்யாவின் பிறந்த நாளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது....