close
Choose your channels

திருமணத்திற்கு பின்னர் நமீதா நடிப்பாரா? கணவர் வீரா பதில்

Friday, November 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நமீதா-வீரா திருமணம் இன்று காலை திருப்பதில் சிறப்பாக நடைபெற்றது. இருவீட்டார் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் திரையுலகினர் புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் நமீதா தனது கணவருடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: எனது கணவர் வீரேந்திர சவுத்ரி என்னுடைய நல்ல நண்பர். என்னை நன்றாக புரிந்து கொண்டவர். நானும் அவரை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன்.
இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு மணமக்கள் ஆகி இருக்கிறோம். திருப்பதியில் எங்கள் திருமணம் இந்து முறைப்படி நடந்து இருக்கிறது. எங்கள் வாழ்க்கை நல்லபடி அமையும் என்று நம்புகிறேன்

நமீதாவின் கணவர்  வீரேந்திர சவுத்ரி கூறியதாவது: நமீதா என்னிடம் நீண்ட நாட்களாக நட்புடன் பழகினார். நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தோம். நமீதா சிறந்த நடிகை. அவர் தொடர்ந்து நடிக்க எந்த தடையும் இல்லை. அவருக்கு பிடித்தமான நல்ல வேடங்கள் அமைந்தால் எந்த மொழி படங்களிலும் நடிப்பார். எப்போதும் அவர் சுதந்திரமாக இருப்பார்.

எனவே திருமணத்திற்கு பின்னரும் நல்ல வேடங்கள் கிடைத்தால் நமீதா திரைப்படங்களில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.