மறுபடியும் பிக்பாஸ் வந்து அபிஷேக் மூஞ்சியில ஒண்ணு போடுங்க: நமீதா வீடியோவுக்கு நெட்டிசன் கமெண்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஆரம்பித்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் என்பதும், நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில நாட்களில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கை போட்டியாளரான நமீதா திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நமீதா ஏன் விலகினார் என்பது குறித்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும், விஜய் டிவி நிர்வாகமும் எந்த விதமான விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நமீதா காயங்களுடன் வெளியேறினார் என்றும் நமீதாவுக்கு கொரோனா பாதிப்பு என்றும் பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசமாக புத்தாடை வழங்கும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவில் அவர் எந்தவித காயமும் அடைந்தது போலவும், கொரோனா பாதிப்பு அடைந்தது போலவும் தெரியவில்லை. அப்படி என்றால் அவர் ஏன் விலகினார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ் அளித்த நெட்டிசன்கள் பலர் நமீதாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்து வருகின்றனர். ஒரு நெட்டிசன், ‘மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்து அபிஷேக் முகத்தில் ஒரு குத்து விடுங்க’ என்று பதிவு செய்துள்ளார்.

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று நமீதா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்வாரா? அவரை பிக்பாஸ் நிர்வாகிகள் அனுமதிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சாலையோர கடையில் பேரம் பேசினாரா நயன்தாரா? வைரல் வீடியோ

சாலையோர கடை ஒன்றில் நயன்தாரா பேக் வாங்கும்போது பேரம் பேசியதாக வீடியோ ஒன்று வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிஎஸ்கேவுல அந்த ரெண்டு பேர் கண்டிப்பா இருப்பாங்க: முத்து ஓபன் டாக்!

2021 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கெத்தாக சாம்பியன் பட்டம் பெற்றது என்பதும் கடந்த ஆண்டு முதல் அணியாக வெளியேறிய போது மீண்டும்

பிக்பாஸ் வீட்டின் முதல் சண்டை: எதிர்பார்த்தது போலவே அபிஷேக் தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் போட்டியாளர்களுக்கு இடையே எந்தவிதமான சண்டை சச்சரவு எதுவும் வராமல் இருக்கிறது என்று ஒரு சில பார்வையாளர்கள்

குப்பையில் மின்னிய தங்கத்தைப் பார்த்தும்… பெண் ஊழியர் செய்த அசத்தல் காரியம்!

சென்னை அடுத்த திருவெற்றியூர் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைகளை

கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்… ஒரு மணிநேரத்தில் ஜாமீன்…என்ன காரணம்?

இந்திய அணியின் முன்னாள் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய யுவராஜ்