ஓபிஎஸ்-க்கு எதற்கு ஆயுத பாதுகாப்பு? நாஞ்சில் சம்பத்

  • IndiaGlitz, [Friday,May 26 2017]

முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் அவருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்க கோரியும் அவரது அணி தரப்பில் உள்துறை அமைச்சகத்தில் கடந்த சில நாடுகளுக்கு முன் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற உள்துறை அமைச்சகம் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க, உத்தரவிட்டடது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ஓபிஎஸ் அவர்களுக்கு அளிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு குறித்து அதிமுக பேச்சாளரும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நேற்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் அதிமுக அம்மா அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட கூட்டத்தில் இதுகுறித்து நாஞ்சில் சம்பத் பேசியபோது, 'மோடியின் சதி செயலுக்கு உடந்தையாக இருப்பவர் ஓபிஎஸ். அதிமுகவை காட்டி கொடுத்ததன் மூலம் எட்டப்பன் வரிசையில் ஓபிஎஸ்க்கு இடம் கிடைத்துள்ளது. மோடியின் ஏற்பாட்டில் அவருக்கு 'ஒய்' பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செத்த பிணத்தை யாரும் கொல்வதில்லை. ஓபிஎஸ்க்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆயுதங்களுக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டனர்' என்று கூறினார்.

மேலும் அவர் பேசியபோது, 'ஓ.பன்னீர்செல்வம் முறைகேடு செய்த சேர்த்த சொத்து பல ஆயிரம் கோடி துபாய், சிங்கப்பூர், பக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளது. எனவே விரைவில் நாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஓபிஎஸ் மீது விசாரணை கமிஷன் அமைக்கவும், லஞ்ச ஒழிப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துவோம்' என்று கூறினார்.

More News

விஜய் பட இயக்குனரிடம் சமந்தா வைத்த வேண்டுகோள்

தென்னிந்தியாவின் பிரபல நடிகையான சமந்தா கையில் தற்போது ஆறு படங்கள் கைவசம் உள்ளது. அவருக்கும் தெலுங்கு பட நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் முதல் வாரம் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்குள் அவர் ஆறு படங்களையும் முடித்துவிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது....

ஒரே படத்தில் இரண்டு வெற்றி பட இயக்குனர்கள்

விக்ரம் நடித்த 'சாமுராய்', பரத் நடித்த 'காதல்', தமன்னா நடித்த 'கல்லூரி, லிங்குசாமி தயாரித்த 'வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். இவர் தற்போது இயக்கி முடித்துள்ள 'ரா ரா ராஜசேகர்' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது...

'தெறி'க்கு 147, 'தளபதி 61' படத்துக்கு 142: இது என்ன கணக்கு தெரியுமா?

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய், காஜல் அகர்வால் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்...

வெங்கட்பிரபுவின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த முழு தகவல்கள் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்....

சூர்யா உள்பட 8 நடிகர்களுக்கு பிடிவாரண்ட்: சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

கடந்த 2009ஆம் ஆண்டு ஒரு நடிகையை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானதை எதிர்த்து கூட்டப்பட்ட கண்டன கூட்டத்தில் சூர்யா, சரத்குமார், சத்யராஜ் உள்பட 8 நடிகர்கள் பத்திரிகையாளர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தனர்.