முதல்வர் தனது பியூனுக்கு மட்டுமே கட்டளையிட முடியும். நாஞ்சில் சம்பத்

  • IndiaGlitz, [Monday,June 05 2017]

இரட்டை இலையை கையகப்படுத்த லஞ்சம் கொடுக்க முயற்சித்தாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்த டிடிவி தினகரன், சமீபத்தில் ஜாமீன் பெற்று சென்னை திரும்பியுள்ளார். மீண்டும் கட்சிப்பணியை தொடங்கவுள்ளதாக தினகரன் கூறிய நிலையில் டிடிவி தினகரனை கட்சிப்பணி ஆற்ற அனுமதிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவெடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தினகரனின் தீவிர ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், 'தினகரன் கட்சிப்பணியாற்ற முதல்வர் முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. முதலமைச்சர் பழனிச்சாமியால் தம்மிடம் பணிபுரியும் பியூனுக்கு தான் கட்டளையிட முடியுமே தவிர, டிடிவி தினகரனுக்கு கட்டளையிட முடியாது' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே சசிகலா அணி, ஓபிஎஸ் அணி அதிமுக இரண்டாக பிரிந்திருக்கும் நிலையில் தற்போது அதிமுக அம்மா அணியில் முதல்வர் பழனிச்சாமி அணி, தினகரன் அணி என இரண்டாக உடையும் வாய்ப்பு உள்ளதாக அரசியக் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இப்படியே போனால் எம்.ஜி.ஆரால் ஆரம்பித்து ஜெயலலிதாவால் கட்டிக்காத்த, அதிமுக சிதறுதேங்காய் போல் சின்னபின்னாமாகிவிட வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.

More News

என்.டி.டி.வி பிரணாய்ராய் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு

இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான என்.டி.டி.வி-யின் துணை நிறுவனர் பிரணாய்ராய் வீட்டில் இன்று காலை முதல் அதிரடியாக சிபிஐ சோதனை செய்து வருகிறது. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் இந்தியாவின் முன்னணி ஊடகங்களின் நிருபர்கள் பிரணாய்ராய் வீட்டில் குவிந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

கனரக ராக்கெட்டை முதன்முதலில் செலுத்தும் இஸ்ரோ: வரலாற்று நிகழ்வு என விஞ்ஞானிகள் பெருமிதம்

விண்வெளித்துறையில் இந்திய விஞ்ஞானிகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு சவால்விடும் வகையில் வெற்றிகரமாக செயற்கைக்கொள்களை அனுப்பி வைக்கும் நிலையில் இன்று ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட் (GSLV-Mark III launch) என்ற ராக்கெட்டை இந்தியா விண்ணில் செலுத்துகிறது...

கடந்த வார ரிலீஸ் படங்களின் சென்னை வசூல் விபரங்கள்

கடந்த வெள்ளியன்று 'ஒரு கிடாயின் கருணை மனு, '7 நாட்கள்', 'போங்கு' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் இந்த மூன்று படங்களுமே கடந்த வார இறுதி நாட்களில் சராசரி வசூலை பெற்றுள்ளது...

ஆறாவது வாரத்திலும் அசராமல் வசூல் செய்து வரும் 'பாகுபலி 2'

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகி ஆறாவது வாரமாக உலகின் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது...

தேசிய விருது பெற்ற பட இயக்குனருடன் இணையும் உதயநிதி

பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் 'கோபுர வாசலிலே', 'சினேகிதியே', 'லேசா லேசா', 'காஞ்சிவரம்' உள்பட பல தரமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்...