விமானத்தில் திடீர் கோளாறு… நூலிலையில் உயிர் தப்பிய நடிகை ரோஜா!

  • IndiaGlitz, [Tuesday,December 14 2021]

தென்னிந்திய சினிமாக்களில் பிரபல நடிகையாக வலம்வந்தவரும் தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய தலைவராகவும் இருந்துவரும் நடிகை ரோஜா சென்ற விமானம் இன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கோளாறு ஏற்பட்டு பின்னர், விபத்தில் இருந்து நூலிலையில் தப்பியதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான “செம்பருத்தி“ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதற்குப் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம்வந்தார். மேலும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவர் அரசியலில் களம் இறங்கினார். அதைத் தொடர்ந்து தற்போது நகரில் தொகுதியில் இரண்டுமுறை வெற்றிப்பெற்று ஆந்திரச் சட்டசபையில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகை ரோஜா இன்று விஜயவாடாவில் இருந்து திருப்பதிக்கு தனியார் விமானத்தில் சென்றுள்ளார். அந்த விமானம் நடுவானில் பறந்து சென்றபோது திடீர் கோளாறு ஏற்பட்டதாகவும் அதையடுத்து சாதுர்யமாக செயல்பட்ட விமானிகள் பெங்களூரு விமான நிலையத்தில் விமானத்தைப் பத்திரமாக தரையிறக்கியதாகவும் நடிகை ரோஜா தெரிவித்து உள்ளார். மேலும் பெங்களூரு சென்ற பயணிகளை கிட்டத்தட்ட 4 மணிநேரம் வெளியே செல்ல அவர்கள் அனுமதிக்க வில்லை என்றும் நடிகை ரோஜா தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் நடிகை ரோஜா சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு தற்போது பெங்களூருவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பெங்களூரு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. அவரது ரசிகர்களும் தற்போது பதற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More News

புதிய ஹைப்பர்லிங்க் கிரைம்-த்ரில்லர் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப்!

புதிய ஹைப்பர்லிங்க் திரைப்படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீறும் பைக்கில் இருந்து கீழே விழுந்த அஜித்: த்ரில்லான 'வலிமை' மேக்கிங் வீடியோ!

அஜித் நடித்த 'வலிமை' படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்று முன் அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே பாடலில் இணைந்த 5 பிரபலங்கள்: 'எதற்கும் துணிந்தவன்' சூப்பர் அப்டேட்!

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும்

ஒருநாள் போட்டியில் இருந்து விலகும் விராட் கோலி…. அதிருப்தி காரணமா?

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து விராட் கோலி விலகவுள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

நிரூப், வெளியே போ: ஆவேசமாகிய பிரியங்கா!

பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் பஸ் டாஸ்க்கில் போட்டியாளர்கள் மிகவும் தீவிரமாக விளையாடி வருகிறார்கள் என்பதும் பஸ்ஸிலிருந்து இறங்கி விட்டால் நாமினேஷன் செய்யப்படுவோம்