close
Choose your channels

நடிகர் விஷால் உடல்நிலை விவகாரம்: நாசர் அளித்த புகார்.  3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Thursday, January 23, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷால் உடல்நிலை குறித்து யூடியூபில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்யப்படுவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகர் நாசர் புகார் அளித்த நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் விஷால் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘மதகஜ ராஜா’ என்ற படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஷால் கலந்து கொண்ட போது, அவர் மைக்கை பிடிக்க முடியாமல் கை நடுங்கிய வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலானது.

இதனை அடுத்து அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சேகுவேரா என்பவர் பேட்டி அளித்தார். அவர் விஷால் உடல்நிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் இது குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவருடைய புகாரின் அடிப்படையில் நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பிய மற்றும் அந்த பேட்டியை வெளியிட்ட இரண்டு யூடியூப் சேனல்கள் மீது மூன்று பிரிவுகளில் சென்னை தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment