ஃபர்ஸ்ட் பால் கண்ணுக்கே தெரியல்ல: நடராஜனின் ஜாலி வீடியோ வைரல்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே பிரிஸ்பேன் நகரில் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பதும் தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த போட்டியில் முதல் முதலாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய நடராஜன் அபாரமாக பந்துவீசி மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதுமட்டுமின்றி முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பையும் பெற்றார். இந்த போட்டியில் அவர் ஒன்பது பந்துகளை சந்தித்து ஒரே ஒரு ரன் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 இன்னிங்ஸ்களில் அவர் இப்போது தான் முதல் ரன் எடுத்து ரன் கணக்கை தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து போட்டி முடிந்ததும் ஜாலியாக நடராஜனுடன் பேசிக் கொண்டிருந்த அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் 4 ரன்களை அடித்து கணக்கை தொடங்குவீர்கள் என்று நினைத்தேன். மிட்செல் ஸ்டார்க் பந்தை தடுத்து விளையாடி நீங்கள் ஒரு ரன் எடுத்திருக்கிறீர்கள். எப்படி சவுகரியமாக விளையாடினீர்களா? என்று கேட்டபோது நடராஜன் சிரித்து கொண்டே, ‘சவுகரியமாக ஆடினேனா? பால் எனது கண்ணுக்கே தெரியவில்லை அண்ணா’ என்று கூறினார்

அதன் பின்னர், ‘டெஸ்ட் போட்டிகளில் அணியில் இடம் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் நான் நெட் பவுலராகத்தான் வந்தேன். அதேபோல் நெட் பவுலராகவே திரும்பிச் செல்வேன் என்று தான் நினைத்தேன் என்றும் ஆனால் டெஸ்ட் போட்டி உள்ளிட்ட அனைத்து வகை போட்டிகளிலும் சான்ஸ் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்றும் கூறினார். மேலும் எதிர்பாராமல் நிறைய பேர் காயம் ஆனதால் தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்றும் நடராஜன் கூறினார். நடராஜன் மற்றும் அஸ்வினின் ஜாலியான இந்த உரையாடலின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

More News

எம்ஜிஆர் உடனான மலரும் நினைவுகளை பகிர்ந்த நடிகை ராதா!

முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்த நாள் நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் அரசியல் தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் எம்ஜிஆர் பிறந்த நாளை

மிரட்டப்பட்டாரா சுரேஷ் சக்கரவர்த்தி?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி இறுதிப் போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நான்காவது வாரம் வெளியேற்றப்பட்டார்.

பாலாஜிக்கு எதிராக ஓட்டு போட சுசி கூறியதற்கு இதுதான் காரணமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய இறுதி போட்டியில் ஆரி வின்னர் என்றும், பாலாஜி ரன்னர் என்றும் அறிவிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே

பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஆரி அறிவிப்பு: கோப்பையை வழங்கினார் கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஃபினாலே நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. கிரேண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்காக ஸ்பெஷலாக

எவிக்ட் ஆன சோம், ரம்யாவுக்கு கொடுத்த ஆச்சரியமான கிஃப்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே இன்று நடைபெற்று வரும் நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஐவரில் ஒருவர், சீசன் 3 வின்னர் முகினுடன் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று கமல்ஹாசன் கூறுகிறார்.