close
Choose your channels

'மேட்ச்' தொடங்கவுள்ள நிலையில் 'மாஸ்' புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்!

Friday, March 12, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில் சற்று முன்னர் நடராஜன் ஒரு மாஸ் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். ‘அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள், ஒரு முக்கிய காரணம் இருக்கிறது’ என்று அவர் தெரிவித்துள்ளதை அவர் இன்றைய போட்டியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கும், அவரது பதிவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. இதுவரை ஏழு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அகமதாபாத் மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் நிலையில் யார்க்கர் ஸ்பெஷலிஸ்டான நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

ஏற்கனவே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.