ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா நடராஜன்: ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இரண்டு போட்டிகளில் மட்டுமே நடராஜன் விளையாடினார்.அதன் பிறகு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அவரது காயம் அதிகமாக இருப்பதாகவும் அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலக நேரிடலாம் என்றும் முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் கூறியபோது ’காயம் காரணமாக நடராஜன் அடுத்த சில போட்டிகளில் ஆட மாட்டார். ஆனால் அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் குறைந்தது ஒருவாரம் அவர் உட்கார்ந்தே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பிறகு தனிமைப்படுத்துதல் காலம் இருக்கும் என்பதும், அதன் பிறகு அவர் தனது உடல் தகுதியை நிரூபித்து அணியில் சேர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நடராஜன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நடராஜன் உடல்நிலை குறித்து அறிக்கை எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் காயம் பெரிதாக இருந்தால் அவரை ஐதராபாத் அணியில் இருந்து விடுவிக்க அணி நிர்வாகம், பிசிசிஐ-இடம் கேட்டுக்கொள்ளும் என்றும் கிரிக்கெட் அகாடமி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

More News

மாலத்தீவு போட்டோ....! பிரபலங்களை எச்சரித்த ஸ்ருதி ஹாசன்...!

திரையுலக பிரபலங்கள் மாலத்தீவு செல்வது குறித்து கருத்து பதிவிட்ட நடிகை ஸ்ருதிஹாசனுக்கு, நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

தடுப்பூசிக்கு ஒரே விலையில்லையா...? மத்திய அரசை  சரமாரியாக கேள்வி கேட்கும் மம்தா, சோனியா....!

தடுப்பூசிக்கு வெவ்வேறு விலை நிர்ணயித்துள்ளதால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் மத்திய அரசை பார்த்து சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர்.

அலட்சியத்தால் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி… பகீர் சம்பவம்!

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்து உள்ளார்

உறவினர்களே அவமிதிப்பு… கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த முஸ்லீம் இளைஞர்கள்!

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் அதுவும் இந்து முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்த காட்சி பார்ப்போரை கண்கலங்கை வைத்துள்ளது.

வாய்ஸ் மெசேஸ் அனுப்பி சிறுவனை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… எதற்கு தெரியுமா?

கேரளாவைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுவனுக்கு தமிழ் சினிமா உலகின் முன்னணி நட்சத்திரமாக இருந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்