close
Choose your channels

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா நடராஜன்: ரசிகர்கள் அதிர்ச்சி

Friday, April 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இரண்டு போட்டிகளில் மட்டுமே நடராஜன் விளையாடினார்.அதன் பிறகு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அவரது காயம் அதிகமாக இருப்பதாகவும் அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலக நேரிடலாம் என்றும் முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் கூறியபோது ’காயம் காரணமாக நடராஜன் அடுத்த சில போட்டிகளில் ஆட மாட்டார். ஆனால் அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் குறைந்தது ஒருவாரம் அவர் உட்கார்ந்தே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பிறகு தனிமைப்படுத்துதல் காலம் இருக்கும் என்பதும், அதன் பிறகு அவர் தனது உடல் தகுதியை நிரூபித்து அணியில் சேர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நடராஜன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நடராஜன் உடல்நிலை குறித்து அறிக்கை எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் காயம் பெரிதாக இருந்தால் அவரை ஐதராபாத் அணியில் இருந்து விடுவிக்க அணி நிர்வாகம், பிசிசிஐ-இடம் கேட்டுக்கொள்ளும் என்றும் கிரிக்கெட் அகாடமி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.