close
Choose your channels

மருத்துவமனையில் இருக்கும் நடராஜன்? புகைப்படத்தை வெளியிட்டு அவரே கூறிய தகவல்!

Tuesday, April 27, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் மூலம் கவனம் பெற்றார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் வலைப்பந்து பயிற்சிக்காக சென்ற இவர் அடுத்தடுத்து ஒருநாள், டெஸ்ட்போட்டி, டி20 போட்டிகளில் அறிமுகமாகி ரவுண்டு கட்டிக் கலக்கினார். இவரது திறமையைப் பார்த்த மூத்த வீரர்கள் பலரும் இந்தியக் கிரிக்கெட் அணியின் வெற்றிக் கோப்பையை நடராஜன் கையில் கொடுத்து அழகுப் பார்த்தனர்.

அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இவர் இடம்பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் இந்தத் தொடர் போட்டியில் இடம்பெறாத நடராஜன் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் விளையாட இருந்த இவர் திடீரெனத் தனது கால் பகுதியில் ஏற்பட்டு உள்ள காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

தற்போது கிரிக்கெட் வீரர் நடராஜன் மருத்துவமனையில் உள்ளது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். மேலும் அந்தப் பதிவில் தனக்கு கால் மூட்டில் பிசகு ஏற்பட்டு உள்ளதாகவும் அதற்காக இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியிட்டு உள்ளார்.

இதனால் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தனக்காக வேண்டிக் கொண்ட அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்து உள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் நடராஜனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு விரைவில் கிரிக்கெட்டிற்கு திரும்பி வரவேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.