மருத்துவமனையில் இருக்கும் நடராஜன்? புகைப்படத்தை வெளியிட்டு அவரே கூறிய தகவல்!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் மூலம் கவனம் பெற்றார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் வலைப்பந்து பயிற்சிக்காக சென்ற இவர் அடுத்தடுத்து ஒருநாள், டெஸ்ட்போட்டி, டி20 போட்டிகளில் அறிமுகமாகி ரவுண்டு கட்டிக் கலக்கினார். இவரது திறமையைப் பார்த்த மூத்த வீரர்கள் பலரும் இந்தியக் கிரிக்கெட் அணியின் வெற்றிக் கோப்பையை நடராஜன் கையில் கொடுத்து அழகுப் பார்த்தனர்.

அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இவர் இடம்பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் இந்தத் தொடர் போட்டியில் இடம்பெறாத நடராஜன் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் விளையாட இருந்த இவர் திடீரெனத் தனது கால் பகுதியில் ஏற்பட்டு உள்ள காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

தற்போது கிரிக்கெட் வீரர் நடராஜன் மருத்துவமனையில் உள்ளது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். மேலும் அந்தப் பதிவில் தனக்கு கால் மூட்டில் பிசகு ஏற்பட்டு உள்ளதாகவும் அதற்காக இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியிட்டு உள்ளார்.

இதனால் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தனக்காக வேண்டிக் கொண்ட அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்து உள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் நடராஜனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு விரைவில் கிரிக்கெட்டிற்கு திரும்பி வரவேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

More News

தேர்தல்  வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை...! மீறினால் கடும் நடவடிக்கை...!

மே-2 வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு. 

ஷிவாங்கியின் புதிய சாதனை: ரசிகர்கள் மகிழ்ச்சி!

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது வேற லெவலில் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பது தெரிந்ததே. குறிப்பாக புகழ், ஷிவாங்கி மற்றும் அஸ்வின் ஆகியோர்களுக்கு கூடுதலாக

ஸ்டெர்லைட் திறப்புக்கு அனுமதி… தமிழகத்திற்கு முன்னுரிமை இல்லை- உச்சநீதிமன்றம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதி அளிக்கிறோம்.

ஹாலிவுட்டையே ஆட்டிப்படைத்த சில்வஸ்டர் ஸ்டோலன்… வெற்றி பயணத்தின் ஆடியோ வடிவம்!

“ராக்கி“ என்ற ஹாலிவுட் சினிமாவை விரும்பாத ரசிகர்களே இருக்க முடியாது. ஆனால் இந்த சினிமாவிற்கு பின்னால் ஒரு கதையாசிரியர்,

பொது முடக்கம் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அரசு...!

இந்தியாவில் பொது முடக்கத்தை அமல்படுத்தினால், என்னென்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.