சசிகலா "தாய் இல்ல பேய்"....! காரசாரமாக பேசிய நத்தம் விஸ்வநாதன்.....!

  • IndiaGlitz, [Sunday,June 20 2021]

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் சசிகலா குறித்து மிகவும் காட்டமாக பேசியுள்ளார்.

திண்டுக்கல் அதிமுக கட்சி அலுவலகத்தில், இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும்,அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் ஆன நத்தம் விஸ்வநாதன் இதற்கு தலைமையேற்றார். இந்தக்கூட்டத்தில்சசிகளவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியதை தொடர்ந்து,இவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறியதாவது,

கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் அதிமுகவில், சசிகலா கட்சியை குறுக்கு வழியில் கைப்பற்ற நினைக்கிறார்...? இதுபோல் நாடகமாடியும் கட்சி முக்கிய உறுப்பினர்களிடம் தொலைபேசியில் பேசி வருகிறார், கட்சியை கைப்பற்றி விடுவாறா...?இந்தக்கேள்வி நகைப்புக்குரியது, சசிகலாவை கட்சியில் ஏற்க தயாராக இல்லை, இவரால் அதிமுகவில் ஒரு சதவீத பாதிப்பை கூட ஏற்படுத்த முடியாது.

தாயையும், பிள்ளையையும் பிரிக்க முடியாது என சசிகலா கூறுகிறார்கள், இதற்கு உங்கள் கருத்து என்ன...?சசிகலா தாய் இல்ல பேய், வேஸ்ட் லக்கேஜ்-ஐ கட்சியால் சுமக்க முடியாது. அவரே தான் தன்னை தாய் என்று கூறிக்கொள்ள வேண்டும். அரசியலில் தவிர்க்கமுடியாத சக்தியல்ல சசி, தவிர்க்க வேண்டிய சக்தி அவர் என்று கூறினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து அமைத்த விசாரணை கமிஷனில் ஓபிஎஸ் ஆஜராகதது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது, அதில் என்ன நடந்தது என ஓபிஎஸ்-க்கு தெரியாது. இதனால் தான் அவர் கமிஷனில் ஆஜராகவில்லை. ஜெயலலிதா அம்மாவிற்கு என்ன நடந்தது என சசிக்கு மட்டுமே தெரியும், மனசாட்சியும் இல்ல, மண்ணாங்கட்டியும் இல்லை அவருக்கு என காரசாரமாக பதில் கூறினார் விஸ்வநாதன்.

More News

ரகசிய இடத்தில், மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது...!

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில், தலைமறைவாகி இருந்த அமைச்சர் மணிகண்டனை

கொரோனா உயிரிழப்புகளை அறிய வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்....! சீமான் வேண்டுகோள்...!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் உயிரிழப்பவர்களின் உண்மை நிலவரத்தை மக்கள் தெரிந்து கொள்ள,

இந்த புகைப்படத்தில் தனுஷ் பட நாயகி இருக்கின்றார்: கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

இந்த லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் நடிகர் நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும்

தந்தையர் தினத்தில் நதியா வெளியிட்ட அசத்தலான புகைப்படம் வைரல்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் அன்றைய தினம் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில்

நடிகை அளித்த புகாரின் அடிப்படையில்  மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது...!

நடிகை சாந்தினியை திருமணம் செய்துகொள்வதாக கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.