'நாதஸ்வரம்' சீரியல் நடிகைக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


’நாதஸ்வரம்’ என்ற சீரியலில் மலர் என்ற கேரக்டரில் நடித்து பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை ஸ்ரிதிக்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து சின்னத்திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
’நாதஸ்வரம்’ ’குலதெய்வம்’, ’’என் இனிய தோழி’, ’கல்யாணமாம் கல்யாணம்’, ’கல்யாணபரிசு’, ’மகராசி’ உள்ளிட்ட சீரியல்களை நடித்தவர் நடிகை ஸ்ரிதிக்கா. இவர் ’மகேஷ் சரண்யா மற்றும் பலர்’ ’வேங்கை’, ’வெண்ணிலா கபடி குழு’ உள்ளிட்ட திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ’மகராசி’ என்ற தொடரில் நடித்த போதுதான் அந்த தொடரின் நாயகன் ஆரியனுக்கும் ஸ்ரிதிக்காவுக்கும் நட்பு ஏற்பட்டு, அதன் பின் காதலாக மாறியது. இதனை எடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்து சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரிதிக்கா கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு வளைகாப்பு உள்பட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் வெளியானது.
இந்த நிலையில் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ஸ்ரிதிக்கா மற்றும் ஆர்யன் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை உலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது நடிகர் ஆர்யா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’லட்சுமி’ என்ற தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments