வெங்கட்பிரபு-நாகசைதன்யா படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை: வில்லன் யார் தெரியுமா?

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் ’NC22’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். நாக சைதன்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் இந்தப் படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஜீவாவிடம் படக்குழுவினர் அணுகியதாகவும் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த படத்தில் ஜீவா இணைவது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி இந்த படத்தில் இணைந்து உள்ளதாகவும் அவருக்கு இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அமைதிக்கு முன் ஒரு புயல்: அஜித்தை வேற லெவலில் வர்ணித்த விக்னேஷ் சிவன்!

அஜித்தின் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன் 'அமைதிக்கு முன் ஒரு புயல்' என வர்ணித்துள்ளார். 

இரட்டை குழந்தைகள் விவகாரம்: விக்கி- நயனிடம் விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு! 

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் குறித்து விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உன் கால்ல விழுந்து உன்னை அம்மான்னு சொல்லட்டா.. முற்றும் ஜிபி முத்து - தனலட்சுமி விவகாரம்!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்து ஆரம்பம் முதல் கடைசி வரை ஜாலியாக காமெடி பண்ணுவார் என்று நினைத்து கொண்டிருந்த நிலையில் மூன்றாவது நாளே அவர் கதறி அழுக

'இந்து' பிரச்சனையால் இன்னும் ஒரு 100 கோடி கிடைக்கலாம்: ரூ.400 கோடி வசூல் குறித்து  PS1 நடிகர்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஏற்கனவே ரூ400 கோடி வசூலை தாண்டிவிட்ட நிலையில் இந்து என்ற பிரச்சனை எழுப்பப்பட்டால் இன்னும் 100 கோடி வசூல் செய்யும்

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி பட தயாரிப்பாளர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், அர்ஜுன் உள்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் காலமான நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.