தேசிய விருது பெற்ற இளம் நடிகர் சாலை விபத்தில் மரணம்: நடிகை கஸ்தூரி இரங்கல்!.

  • IndiaGlitz, [Monday,June 14 2021]

தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் ஒருவர் சாலை விபத்தில் மரணம் அடைந்ததை அடுத்து நடிகை கஸ்தூரி அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்து உள்ளார்

பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய். இவர் கன்னட திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பாக ’நானு அவனல்ல அவளு’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’கில்லிங் வீரப்பன்’ என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தை ராம்கோபால்வர்மா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி பெங்களூரு அருகே இரவு சுமார் 12 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சஞ்சாரி விஜய் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு மூளையில் ரத்தம் உறைந்ததாக கூறப்பட்டது. பெங்களூர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சர்ஜரி செய்யப்பட்டது என்றும் அதன் பின்னரும் அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து இன்று அவர் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து சஞ்சாரி விஜய் மரணமடைந்ததாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்

நடிகர் சஞ்சாரி மரணம் குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

More News

தி ஃபேமிலி மேன் வெப் தொடர் மூலம் சர்ச்சையை சம்பாதித்த இரட்டையர்கள்!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான “தி ஃபேமிலி மேன் 2” வெப் தொடருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது.

சென்னை- ஸ்பெஷல் ட்ரெயினிங் என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய பயிற்சியாளர்!

சென்னையில் ஜிம் ஒன்றிற்கு சென்ற இளம் பெண்ணிடம் அதன் பயிற்சியாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்.

சாதாரண கணக்கே எனக்கு தெரியாது: காவல்துறை ஆணையரிடம் புகாரளித்த நடிகர் செந்தில் பேட்டி!

பிரபல காமெடி நடிகர் செந்தில் பெயரில் போலியான டுவிட்டர் கணக்கு ஒன்றை தொடங்கிய மர்ம நபர் ஒருவர், அதன் மூலம் முதல்வருக்கு எதிராகவும், டாஸ்மார்க் கடை திறப்பிற்கு எதிராகவும் அவதூறான

என்னை கொன்றுவிட்ட தருணம் அது: சிஎஸ்கே வீரர் டுபிளஸ்சிஸ் மனைவியின் உருக்கமான பதிவு!

சமீபத்தில் பாகிஸ்தான் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும், தென்னாபிரிக்க வீரருமான டுப்லஸ்ஸிஸ் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது என்பது தெரிந்ததே

3 வயதிலேயே மகளுக்கு பாரம்பரிய கலையை கற்று கொடுக்கும் நடிகை அசின்!

நடிகை அசின் தனது 3 வயது மகளுக்கு பாரம்பரிய கலையை கற்றுத் தந்துள்ள தகவல் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது