சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த முன்னாள் பாஜக எம்பி

  • IndiaGlitz, [Saturday,July 20 2019]

சூர்யா நடித்து முடித்துள்ள 'காப்பான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அவர் தற்போது 'சூரரைப்போற்று' என்ற படத்தில் நடித்து வருகிறார். 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதாகொங்காரா இந்த படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபல பாலிவுட் நடிகரும், தேசிய விருது பெற்றவரும், முன்னாள் எம்பியுமான பரேஷ் ராவல் என்பவர் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் ஏர்லைன்ஸ் உரிமையாளராக நடிக்க இருப்பதாக தெரிகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக அகமதாபாத் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட பரேஷ் ராவல் சுமார் 6 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இசசயில் நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது
 

More News

உனக்கு என்ன தகுதி இருக்கு? என்று கேட்டவர்களுக்கு சூர்யாவின் பதிலடி அறிக்கை

கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது.

பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறாரா ஆல்யா மானஸா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஃபாத்திமா பாபு, வனிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர். நாளை ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவுள்ள

எனது கணவர் ஆத்மா சாந்தி அடையாது! சரவணபவன் ராஜகோபால் இறப்பு குறித்து ஜீவஜோதி

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால், ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற நிலையில் சிறைக்கு செல்லும் முன்னரே உடல்நலக்குறைவால்

'நேர் கொண்ட பார்வை' படத்தின் புதிய அப்டேட் தந்த போனிகபூர்

அஜித் நடித்து முடித்துள்ள நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாலும்,

டாப்சியை அடுத்து தமன்னாவுக்கு உதவிய காஜல் அகர்வால்

பிரபல நடிகை தமன்னா நடிக்கவுள்ள அடுத்த த்ரில் படம் ஒன்றின் டைட்டில் லுக் போஸ்டரை நேற்று நடிகை டாப்சி வெளியிட்டார் என்பது தெரிந்ததே