close
Choose your channels

தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரரின் அசத்தல் சாதனை!

Wednesday, February 24, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரரான ஜி.சத்யன் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார். இதனால் இவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

82 ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தமிழக வீரர் ஜி.சத்யன் 9 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற சரத் கமல் என்பவரை 11-6, 10-12, 7-11, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த இவர் முன்னதாக போலந்து லீக் போட்டிகளில் கலந்து கொண்டு 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றார். அதோடு கடந்த ஆண்டு ஜப்பான் நாட்டில் நடைபெற்ற ஒகியாமா லீக் போட்டிகளில் கலந்து கொண்டு சர்வதே அடையாளத்தை பெற்றார். தற்போது முதன் முறையாக தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று தமிழகத்திறகு பெருமை தேடித் தந்து இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.