சீரியஸ் ஆகும் சித்தார்த் சர்ச்சை டுவிட் விவகாரம்: வழக்குப்பதிவா?

  • IndiaGlitz, [Monday,January 10 2022]

நடிகை சித்தார்த் சர்ச்சைக்குரிய டுவிட் ஒன்றை பதிவு செய்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்ற போது பாதுகாப்பு குறைபாடு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்ய முடியாது என்றும் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் பதிவு செய்திருந்தனர்

சாய்னா நேவலின் இந்த பதிவுக்கு நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் செய்த பதிவில் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் மகாராஷ்டிர மாநில டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவலை அவமானப்படுத்தும் வகையில் சித்தார்த்தின் டுவிட் இருப்பதாகவும், இதனால் அவர் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டு கொண்டுள்ளது. இதனால் சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்: பிரபல தமிழ் ஹீரோ டுவிட்

ஹிரோஷிமா நாகசாகி மாதிரி உலகம் முழுவதும் பாம் போட்டு அழித்துவிட்டால் நன்றாக இருக்கும் என பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் ட்விட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொகுசு ஹோட்டலை வளைத்துப்போட்ட அம்பானி.. மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியப் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் முகேஷ் அம்பானி அமெரிக்காவில் உள்ள பிரம்மாண்ட

காவல் துறையினரைக் குறி வைக்கும் கொரோனா பாதிப்பு!

சென்னையில் காவல் துறையைச் சேர்ந்த 70 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல நடிகரின் சகோதரி: முதல்வர் வேட்பாளரா?

பிரபல நடிகரின் சகோதரி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உள்ளதாகவும் அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றுடன் ஒரு வருஷம் ஆச்சு: கணவர், குழந்தையுடன் பீச்சில் கொண்டாடிய ஸ்ரேயா சரண்!

பிரபல நடிகை ஸ்ரேயா சரண் தன்னுடைய குழந்தைக்கு ஒரு வயது நிறைவு பெறுவதை அடுத்து கணவர் மற்றும் குழந்தையுடன் பீச்சில் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை