close
Choose your channels

சொந்த ஊருக்கு சென்ற 'பேட்ட' நடிகர் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

Monday, May 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்பட பலர் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தின் முக்கிய வில்லனாக நடித்திருந்தார் நவாசுதீன் சித்திக். இவர் தனது குடும்பத்தினர்களுடன் சொந்த ஊரில் தனிமைப்படுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகர் நவாசுதீன் சித்திக் சமீபத்தில் மும்பையில் இருந்து தனது சொந்த ஊரான புத்தானா என்ற பகுதிக்கு குடும்பத்தினருடன் சென்றார். அரசின் அனுமதி பெற்று முறைப்படி டிராவல் பாஸ் வாங்கி அவர் கடந்த 15ம் தேதி சொந்த ஊருக்கு சென்றபோது அங்கு உள்ள சுகாதார துறை அதிகாரிகள் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தார்கள். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்தபோதிலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அதனை நவாசுதீன் சித்திக் மற்றும் அவரது குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து நவாசுதீன் சித்திக் கூறியபோது ’முறைப்படி டிராவல்ஸ் பாஸ் எடுத்து சொந்த ஊர் வந்ததாகவும் வரும் வழியில் 25 இடங்களில் தங்களை பரிசோதனை செய்ததாகவும் தங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் நெகட்டிவ் தான் என்றாலும் இன்னும் 14 நாட்களுக்கு தங்கள் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்கப் போவதாகவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.