close
Choose your channels

கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா - சமந்தா: காரணம் இதுதான் 

Thursday, March 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டாலும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டிய நிலை இருந்தது என்பதும் அந்த பாடல் காட்சியும் சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். குறிப்பாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டதன் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos