close
Choose your channels

மூன்று தலைமுறை நாயகர்களுடன் நயன்தாரா

Saturday, November 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தமிழ் திரையுலகில் கடந்த 12 ஆண்டுகளாக நாயகியாக ஜொலித்து வரும் நட்சத்திரமாக திகழும் நயன்தாராவுக்கு பல சிறப்புகள் உண்டு. அதில் ஒன்று மூன்று தலைமுறை நாயகர்களுடன் அவர் ஜோடியாக நடித்ததுதான். பொதுவாக நாயகர்கள் தான் மூன்று, நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்து வருவது வழக்கம் ஆனால் ஒரு நடிகை மூன்று தலைமுறை நாயகர்களுடன் இணைந்து நடிப்பது அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

'சந்திரமுகி' மற்றும் 'ஐயா' படங்களில் சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் சரத்குமார் ஆகியோர்களுடன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

அதன் பின்னர் அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய்யுடன் 'வில்லு', அஜித்துடன் 'பில்லா, ஆரம்பம், ஏகன், சூர்யாவுடன் 'கஜினி, ஆதவன், மாஸ், விக்ரமுடன் 'இருமுகன்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதன்பின்னர் தற்போதைய இளையதலைமுறை நடிகர்களான தனுஷுடன் 'யாரடி நீ மோகினி', சிம்புவுடன் 'வல்லவன்', 'இது நம்ம ஆளு', விஷாலுடன் 'சத்யம்', ஆர்யாவுடன் 'ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஜெயம் ரவியுடன் 'தனி ஒருவன்', ஆரியுடன் 'மாயா', விஜய்சேதுபதியுடன் 'நானும் ரெளடிதான், சிவகார்த்திகேயனுடன் 'வேலைக்காரன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நயன்தாரா திரையுலகில் இருந்தால் அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடிக்க  மார்க்கண்டேயனி நயன்தாராவுக்கு வாழ்த்துக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.