close
Choose your channels

இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமான நயன்தாரா.. இயக்குனர்கள் யார் யார்?

Friday, February 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார் என்பதும் இந்த குழந்தைகளை கவனிப்பதற்காக கடந்த சில மாதங்களாக அவர் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றும் கூறப்பட்டது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ’ஜவான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நயன்தாரா தற்போது இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான 'யாரடி நீ மோகினி’ என்ற திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

அடுத்ததாக மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் ’தனி ஒருவன் 2’ என்ற படம் இந்த ஆண்டு உருவாக இருப்பதாகவும் இதில் நடிப்பதற்காகவும் நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்த ’இறைவன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.