close
Choose your channels

நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா? ஒரு விளக்கம்

Sunday, June 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாகவும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. மேலும் அந்த தயாரிப்பாளரை சமீபத்தில் சந்தித்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் சிலர் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாகவும் இதனை அடுத்து அவர்கள் இருவரும் எழும்பூரில் உள்ள தங்களது இல்லத்தில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ள நயன்தாரா தரப்பினர் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நயன்தாரா நடித்து முடித்துள்ள ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.