close
Choose your channels

ஒரே படத்தில் நயன்தாரா மற்றும் சோனம்கபூர்!

Saturday, November 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரியன் திரைப்படமான ‘பிளைண்ட்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படம் ஒன்றில் நடிகை நயன்தாரா நடித்து வருவதாகவும் இந்த படத்திற்கு ‘நெற்றிக்கண்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். விக்னேஷ் சிவன் தயாரிக்கும் இந்த படத்தை ‘அவள்’ என்ற படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘பிளைண்ட்’ திரைப்படம் தமிழை அடுத்து இந்தியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. தமிழில் நயன்தாரா நடிக்கும் கேரக்டரில் இந்தியில் சோனம்கபூர் நடிக்கவுள்ளார். இயக்குனர் ஷோமி மகிஜா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

விபத்தில் சிக்கும் ஒரு பெண் காவல்துறை அதிகாரி எதிர்பாராதவிதத்தில் ஒரு விபத்தில் சிக்கி தனது பார்வையை இழக்கின்றார். இந்த நிலையில் இவர் ஒரு முக்கிய வழக்கில் சாட்சி சொல்ல வருகிறார். இவர் சொல்லும் சாட்சியால் ஏற்படும் விபரீதங்கள், திருப்பங்கள் அதனால் அவருக்கு ஏற்படும் ஆபத்துக்கள் ஆகியவைதான் இந்த படத்தின் கதை. கண் பார்வை இழந்த ஒரு பெண் தனது மற்ற புலன்களின் உதவியால் இந்த சிக்கலில் இருந்து எப்படி தப்பித்தார் என்பது இந்த படத்தில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.