ஒரே படத்தில் நயன்தாரா மற்றும் சோனம்கபூர்!

  • IndiaGlitz, [Saturday,November 16 2019]

கொரியன் திரைப்படமான ‘பிளைண்ட்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படம் ஒன்றில் நடிகை நயன்தாரா நடித்து வருவதாகவும் இந்த படத்திற்கு ‘நெற்றிக்கண்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். விக்னேஷ் சிவன் தயாரிக்கும் இந்த படத்தை ‘அவள்’ என்ற படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘பிளைண்ட்’ திரைப்படம் தமிழை அடுத்து இந்தியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. தமிழில் நயன்தாரா நடிக்கும் கேரக்டரில் இந்தியில் சோனம்கபூர் நடிக்கவுள்ளார். இயக்குனர் ஷோமி மகிஜா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

விபத்தில் சிக்கும் ஒரு பெண் காவல்துறை அதிகாரி எதிர்பாராதவிதத்தில் ஒரு விபத்தில் சிக்கி தனது பார்வையை இழக்கின்றார். இந்த நிலையில் இவர் ஒரு முக்கிய வழக்கில் சாட்சி சொல்ல வருகிறார். இவர் சொல்லும் சாட்சியால் ஏற்படும் விபரீதங்கள், திருப்பங்கள் அதனால் அவருக்கு ஏற்படும் ஆபத்துக்கள் ஆகியவைதான் இந்த படத்தின் கதை. கண் பார்வை இழந்த ஒரு பெண் தனது மற்ற புலன்களின் உதவியால் இந்த சிக்கலில் இருந்து எப்படி தப்பித்தார் என்பது இந்த படத்தில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருக்கும்.

More News

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த 'அசுரன்' பட நடிகர்

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஏற்கனவே கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றனர்.

போனிகபூரை திடீரென சந்தித்த நயன்தாரா: வலிமை நாயகியா?

அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான 'வலிமை' என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே.

மகன் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் பரிதாபமாக பலியான தந்தை!

மகனின் திருமணம் நடைபெற ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் நடந்த ஒரு எதிர்பாராத சம்பவத்தால் தந்தை மரணம் அடைந்த சோக நிகழ்ச்சி  இந்தூர் அருகே உள்ள உஜ்ஜயின் என்ற கிராமத்தில் நடந்துள்ளது 

டெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை! ஃபேஸ்புக் காதலன் காரணமா?

டெல்லி ஹோட்டல் ஒன்றில் திருமணமான இளம் பெண் மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது 

கணவரின் முதல் மனைவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2வது மனைவி கைது!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அவருக்கு சுபாஷினி என்ற 39 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது