செலவில்லாமல் திருமணம் செய்த நயன்தாராவுக்கு இத்தனை கோடி வருமானமா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு பல கோடி ரூபாய் செலவாகி இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில் அவரது திருமணத்திற்கு ஒரு ரூபாய் கூட அவர் செலவு செய்யவில்லை என்றும் அது மட்டுமின்றி அவருக்கு இந்த திருமணத்தால் 25 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உள்ள அனைத்து அறைகளையும் தனது திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்காக புக் செய்த நயன்தாரா வங்க கடலின் ஓரத்தில் ஒரு கண்ணாடி மாளிகை போன்ற செட்டை அமைத்தார். அந்த கண்ணாடி மாளிகையில் தான் திருமணம் உள்ளிட்ட சடங்குகள் நடந்தது.

மேலும் ஒரு நபருக்கு 3500 ரூபாய் மதிப்புள்ள விருந்து சாப்பாடு, மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட மேக்கப் மேன்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் என கோடிக்கணக்கில் செலவானதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த திருமணத்தின் மொத்த செலவையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டது என்றும், அதுமட்டுமின்றி நயன்தாராவுக்கு கூடுதலாக அந்நிறுவனம் 25 கோடி ரூபாய் தந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதற்கு பதிலாக நயன்தாராவின் திருமணத்தை முழுவதுமாக வீடியோ எடுத்து தனது ஓடிடி தளத்தில் ஒளிபரப்ப அனுமதி பெற்று உள்ளது. எனவே தான் நயன்தாராவுக்கு திருமண செலவாக ஒரு ரூபாய் கூட செலவாகவில்லை என்பது மட்டுமின்றி ரூபாய் 25 கோடி வருமானமும் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

More News

ஒரே ஒரு காட்சியில் நடித்து பிரபலமான மதுரை பொண்ணு: தொடர்கிறது 'விக்ரம்' மேஜிக்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தாலும் ஒவ்வொரு முறை பார்க்கும்போது

சூர்யா-கார்த்தி பட நடிகைக்கு பெண் குழந்தை: வைரல் புகைப்படங்கள்!

சூர்யா, கார்த்தி படங்களில் நடித்த நடிகை சமீபத்தில் கர்ப்பமாக இருந்த நிலையில் நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம்

போலீஸில் புகார் அளித்த தனுஷ்-சிம்பு பட நாயகி: ஏன் தெரியுமா?

தன்னை பற்றி இன்ஸ்டாகிராமில் ஆபாச கருத்து தெரிவித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிம்பு, தனுஷ் பட நடிகை போலிஸில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மார்பகத்தை பெரிதாக்க ஊசி: பகீர் தகவலை வெளியிட்ட 'கபாலி' நாயகி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'கபாலி' படத்தில் நாயகியாக நடித்த ராதிகா ஆப்தே, தனது மார்பகத்தை பெரிதாக்க ஊசி போட சொல்லி பலர் வலியுறுத்தியதாக

திருமணமான மறுநாளே மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்: யாரிடம்? எதற்காக?

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் நேற்று முன்தினம் நடந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.